யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் நாட்டிற்கு சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவும் யுத்த காலத்தில் ஒரு கிலோ அரிசி 100 ரூபாவாகவும் ஒரு தேங்காய் 80 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹோமாகம பிட்டிப்பனவில் இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சிமையம் மற்றும் நனோ விஞ்ஞான பூங்காவினை திறந்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அநேகமான பிள்ளைகள் வைத்தியர்கள், ஆசிரியர்களாக வரவே விரும்புவதாகவும் விஞ்ஞானிகளாக வர விரும்பும் பிள்ளைகள் குறைவு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
30 வருடமாக நாட்டில் நிலவிய போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பாரிய வீதிகள், விமான நிலையம், துறைமுகம் என பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த சிந்தனையின் படி வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய நானோ தொழிநுட்ப ஆராய்ச்சிமையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.





