வவுனியா – ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள புகையிரதக் கம்பத்துடன் மோட்டர் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈரப்பெரியகுளம், அவுசப்பிட்டிய பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து புகையிரத பாதையில் இருந்த கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன்போது, தூக்கி வீசப்பட்ட மோட்டர் சைக்கிள் இரண்டாக உடைவுற்ற நிலையில் முன்னே சென்ற காருடன் மோதி மீண்டும் விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும், விபத்தின் போது காயமடைந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்த 25 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.