சச்சின் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி!!

400

Sachinசச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்கிந்திய தீவுகள் விளையாட உள்ளது.

இவ்விரு அணிகளுக்கான டெஸ்ட் போட்டிகள் மும்பை வாங்கடே மற்றும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறுகின்றன. ஈடன் கார்டனில் நடக்கும் போட்டி தான் சச்சின் விளையாடும் கடைசி போட்டியாகும்.

இதனை சிறப்பான போட்டியாக மாற்ற பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு வெறும் 5000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம் பல்வேறு கிளப் உறுப்பினர்கள், பிரபலங்களுக்காக 67,000 இருக்கைகள் ஒதுக்கப்படுகிறது. இதனை காண பொலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.