தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள 27 வயது யுவதி!!

490

களுத்துறையில் 27 வயது யுவதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதியின் சடலம் நேற்றைய தினம், அவரது வீட்டின் அறையிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.

சாந்தனி மகேஷிக்கா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் கண்டறிப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.