பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் பற்றிய விசாரணை சிஐடி வசம்!!

393

கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை வினாத்தாளுக்கு விடையளித்த மாணவர்கள் குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.