இலங்கையில் வட,கிழக்கு பருவமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு ஆகிய பிரதேசங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடை மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் மாலை நேரங்களில் மழை பெய்யும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.