கொழும்பில் 600 யாசகர்கள் : ஜனவரி முதல் யாசகத்தில் ஈடுபட தடை!!

782

கொழும்பு நகரில் யாசகத்தில் ஈடுபடுவதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தடை செய்யப்படுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கொழும்பு நகரில் 600 யாசகர்கள் யாசகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாசகத்தில் ஈடுபடுவோர்களின் வாழ்வாதாரம் கருதி, அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக அம்பலாந்தோட்டை – ரிதிகமயில் 80 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு நிலையமொன்றை அமைத்துள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

யாசகத்தில் ஈடுபடுவதை நிறுத்துமாறு முதலில் அவர்களிடம் கருணை அடிப்படையில் கோருவதாகவும், அதன்படி அவர்கள் செயற்படா விட்டால், மாநகர சபை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.