பெண்ணொருவர் தொடர்ந்து அவமதித்ததால் தற்கொலை செய்த இளைஞன்!!

548
நீர்கொழும்பில் பெண் ஒருவரால் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். கட்டான, கிம்புலாப்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவரிடம் பெற்றுக்கொண்ட 25000 ரூபா கடனை திருப்பி செலுத்த முடியாமல், ஏற்பட்ட அவமானத்தால் அவர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
கடன் வழங்கிய பெண் குறித்த இளைஞனின் வீட்டுக்கு சென்று அவமதித்துள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த இளைஞன் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த இளைஞர் அந்த பிரதேச பட்டாசு தொழிற்சாலையில் சேவை செய்துள்ள நிலையில் அதன் உரிமையாளரான பெண் ஒருவரிடம் கடன் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த இளைஞர் அந்த பெண்ணிடம் வட்டிக்கே 25000 ரூபாய் பணம் பெற்றுள்ளார் என உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
இடையில் அவரால் ஒழுங்கான முறையில் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உரிமையாளர் அவரை அவமதிக்கவும் அங்கிருந்து விலக்க தீர்மானித்துள்ளார்.
எனினும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பார்க்கும் இடம் எல்லாம் அந்த பெண்ணால் அவர் அவமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் மரவிரக்தியடைந்தவர் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.