வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (20.12.2017) மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
சிறிரெலா கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வாசல, வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் குமாரசாமி உள்ளிட்டோரை கட்டுப்பணத்தை செலுத்தினர்.
இதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஏற்பட்ட பேச்சுக்களில் இணக்கம் காணப்படாமையால் அபிவிருத்தியை விரும்பும் எமது மக்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாக ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.