வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை மகன் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் மனம் உடைந்த பெற்றோர் தங்கள் மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள மறையூரை சேர்ந்தவர் முருகன் (50). இவர் மனைவி முத்துலட்சுமி (45). இவர்களுக்கு பாண்டியராஜ் (25) என்ற மகனும், பானுப்பிரியா (21) என்ற மகளும் உள்ளனர்.
பாண்டியராஜ் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், கல்லூரியில் படித்த போதே ஒரு பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பாண்டியராஜின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலியை சில நாட்களுக்கு முன்பு பாண்டியராஜ் திருமணம் செய்துகொண்டார்.
இதனால் அவமானம் தாங்காத முருகன், பானுப்பிரியா, முத்துலட்சுமி ஆகியோர் கொழுமம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து மூவரின் சடலத்தையும் கைப்பற்றிய பொலிசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.