சவுதியில் கடத்தி கொலை செய்யப்பட்ட நீதிபதி ஷேக் முகமதின் சடலத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
நீதிபதி ஷேக் முகமது அல்-ஜிரானி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தேடி வந்த நிலையில், நாட்டின் குட்டீப் மாநகராட்சியில் அதிகாரிகள் செவ்வாய் கிழமை சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்குள்ள பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஷேக்கின் சடலத்தை அதிகாரிகள் கைப்பற்றியதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது சல்மான் அல்-பராஜ் என்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் கொன்றனர்.
சிறப்பு பாதுகாப்பு அதிகாரி காலித் அல்-சல்மெடியும் இந்த தாக்குதலின் போது உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பான செய்தியை கூடுதல் தகவலுடன் மாநில உள்துறை அமைச்சகம் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.