வவுனியா மாவட்டத்தின் ஐந்து உள்ளூராட்சி சபைகளில் மூன்று சபைகளில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மாஹிர், வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் முனாபர் உள்ளிட்டோரே கட்டுப்பணத்தை செலுத்தினர்.
இதன்போது, நல்லெண்ண அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாத நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக இதன்போது கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மாஹிர் தெரிவித்தார்.