வவுனியாவில் 4 சபைகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு!!

970

 
வவுனியா மாவட்டத்தில் 5 சபைகளில் 4 சபைகளுக்கு நேற்றைய தினம்(20.12) தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.

நேற்று மாலை வட மாகாணசபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமான ப.சத்தியலிங்கம் தலைமையிலான குழுவினர் இந்த வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ப.சத்தியலிங்கம்..

அனைத்து சபைகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது, வவுனியா வடக்கு பிரதேச சபையில் பெரும்பான்மை இனத்தவர்கள் உள்வாங்கப்படவுள்ளமையினால் பொது மக்கள் மிக அவதானமாக வாக்குகள் சிதறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இன்று வியாழக்கிழமை (21.12) நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் அனைத்தும் நிறைவடைகின்ற நிலையில் காலதாமதம் இன்றி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் தெரிவித்தார்.