திருமணச் சான்றிழ்களுடன் மூன்று பெண்கள் ஒரு கணவருக்காக மோதல்!!

762

திருமண சான்றிதழ்களுடன் மூன்று பெண்கள் ஒரு கணவருக்காக மோதிக் கொண்ட சம்பவமொன்று கெஸ்பேவ பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொருவருக்கும் தெரியாமல் மற்றைய பெண்களை இந்த நபர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் மூன்று திருமணங்களை செய்து கொண்ட நபரை பண்டாரகம பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
பண்டாரகம சங்கமித்தா மாவத்தையில் இரண்டு பெண்கள் மோதிக் கொள்வதாக 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தொடர் தகவல்களை அடுத்து பொலிஸார் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அதன் போது இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டு கணவருக்கு உரிமை கோரிக் கொண்டிருந்ததனை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
அந்த இரண்டு பெண்களையும் அங்கிருந்த ஆணையும் பொலிஸார், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்ட போது இரண்டு பெண்களும் இவர் என் கணவர் எனக்கூறி அதற்கான ஆதாரமாக திருமண சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர்.
போலிப் பெயர்களில் போலி பிறப்புச் சான்றிதழ்கள் தயாரித்து இரண்டு பெண்களையும் ஏமாற்றி இந்த நபர் , இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை சட்டவிரோதமான முறையில் செய்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததுடன் மற்றுமொரு பெண் இவர் என் கணவர் என மற்றுமொரு திருமண சான்றிதழை சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, குறித்த நபர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மூன்று திருமணங்களை செய்து கொண்டுள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
முதல் இரண்டு திருமணங்களின் ஊடாகவும் இரண்டு மனைவியருக்கும் தலா இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதில் ஒர் பெண் திருமணமானவர் எனவும் முதல் திருமணத்தில் இரண்டு பிள்ளைகளையும் நிர்க்கதியாக்கி விட்டு இந்த நபருடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறை, அலுபோலுமுல மற்றும் பலங்கொட ஆகிய பகுதிகளில் மூன்று பெண்களை குறித்த நபர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
39 வயதான நபர் பல திருமணங்களை செய்து கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முன்னிலையப்படுத்தப்படவுள்ளார்.