வவுனியா மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று (21.12) வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வாசல தலைமையிலான குழுவினர், வவுனியா தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அத்தோடு, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி சார்பில் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன் தலைமையிலான குழுவினரும் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கே வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தின் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜயதிலக தலைமையிலான குழுவினரே ஐ.தே.க. சார்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.