காலையில் திருமணம் செய்து இரவில் விவாகரத்து செய்யும் கொடுமை!!

703

புனேவில் காலையில் திருமணம் செய்துகொண்ட பின்னுக்கு இரவில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

Kanjarbhat சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. திருமணமான அன்று பெண்களுக்கு ஒரு வெள்ளைப்போர்வை கொடுத்து பெண்களின் கன்னித்தன்மை சோதனை செய்யப்படும். அந்த பரிசோதனையில் பெண்கள் தோற்றுவிட்டால், அந்த திருமணம் விவாகரத்தில் முடியும்.

இதுகுறித்து பொலிசாரிடமும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுப்பதில்லை. சமீபத்தில் 20 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமண நாளன்று இரவு, இவரின் கன்னித்தன்னை சோதனை செய்யப்பட்டபோது, இவர் அதில் தோல்வியுற்றுள்ளார். இதனால், கணவர் அப்பெண்ணை விவாகரத்து செய்யும் முடிவினை எடுத்துள்ளார். இதனால் அந்த சமூகத்தை சேர்ந்த அதிக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் பஞ்சாயத்தை வைத்து முடித்துக்கொள்கிறார்கள். இந்த பரிசோதனை முறைக்கு இந்த சமூகத்தை சேர்ந்த படித்த 30 இளைஞர்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.