கனடாவில் மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் தமிழ் இளைஞன் பலி!!

528

kavuthamகனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்ட மோதலில். மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்துள்ளார். மேலும் ஐவர் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பலியான இளைஞர் அடையாளம் தெரிந்து விட்டதாகவும் அவர் ரொறொன்ரோவிலிருந்து படிப்பதற்காக வந்த மாணவர் கௌதம் (கெவின்) குகதாசன் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

படிப்பதற்காக வந்த இந்த மாணவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகத்தின் அருகே வாழ்ந்து வந்ததையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதால் விரைவில் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் தாக்கல் செய்ய இருப்பதாகப் பொலிசார் தெரிவித்தனர்.