வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

480

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சியை சேர்ந்த 30 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடமிருந்து 3 கிலோ 570 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.