திடீரென கறுப்பு நிறமாக மாறிய ஆற்று நீர்!!

736

 
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் கொண்டு செல்லும் பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவின் நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கெசல்கமுவ ஓயா ஆற்றில் செல்லும் நீர் இன்று காலை திடீரென கறுப்பு நிறத்தில் செல்வதை பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கெசல்கமுவ ஒயா ஆற்று நீரின் நிறம் திடீரென மாறியது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை தேயிலை தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர் கலந்ததால் இந்த நிறமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன் காரனமாக பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை அமைக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களை பொலிஸார் சோதனை செய்து வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.