பிரசவ வலியிலும் தேர்வு எழுதிய பெண் : வைரலான புகைப்படங்கள்!!

1235

அமெரிக்காவில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி தேர்வு எழுதும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் உள்ள கல்லூரியில் படித்து வருபவர் நஸியா தாமஸ். இவர் கர்ப்பம் அடைந்த நிலையில் கல்லூரிக்கும் சென்று வந்தார். இந்நிலையில் பிரசவத்துக்காக கடந்த மாதம் 11ம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

அன்றைய தினமே இவருக்கு கல்லூரியில் செமஸ்டர் தேர்வும் இருந்தது. பிரசவ வலி இருந்த போதும், அதை பொருட்படுத்தாமல் தேர்வு எழுதினார், இப்புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.

தேர்வு எழுதி முடித்ததும் நஸியாவுக்கு அடுத்த நாள் அதாவது 12ம் திகதி அழகான குழந்தை பிறந்தது. அவர் கூறுகையில், என் மகனை உலகிற்கு கொண்டுவரும் முன் தேர்வு எழுதி முடிப்பதில் கவனமாக இருந்தேன், எனது கல்லூரியும் பாராட்டுகளை தெரிவித்தது.அடுத்ததடுத்த தேர்வுகளை எழுத கல்லூரி நிர்வாகம் தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.