லிந்துலை – நாகசேனை – டிலிகுற்றி தோட்டத்தில் நேற்று (25.12) மாலை உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
டிலிகுற்றி தோட்டத்தில் தேயிலை மலையில் தண்ணீர் பார்ப்பதற்காக சென்ற ஒருவர் அவ்விடத்தில் கிடந்த சிசுவை கண்டுள்ளார்.
இதனையடுத்து, லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தினை மீட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
நீதவான் விசாரணைகளின் பின், பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






