பிபா கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் சம்பியன் கிண்ணம் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருக்கின்றது. அதிலும் முக்கியமாக இந்தக் கிண்ணம் முதல் முறையாக இலங்கை வருகிறது.
2018 உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் முதலாவது நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி தெற்காசிய நாடுகளிலேயே இலங்கைக்கு அடுத்து பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு மட்டுமே இந்தக் கிண்ணம் கொண்டுசெல்லப்படவிருக்கின்றது என்பதும் விசேட அம்சமாகும்.
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணமானது சகல மக்களும் கண்டுகளிப்பதற்காக 23 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அவ்வாறு கொண்டு செல்லப்படவுள்ள முதலாவது நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2018 ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள வெற்றிக்கிண்ணத்தை கால்பந்து ரசிகர்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






