இலங்கையின் 3000 முகநூல் கணக்குகள் முடக்கம்!!

600

இலங்கையின் 3000 முகநூல் கணக்குகளை முகநூல் நிறுவனம் இந்த ஆண்டில் முடக்கியுள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவைரயில் இவ்வாறு சுமார் 3000 முகநூல் கணக்குகள் பாவனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

போலி கணக்குகளை நடத்திச் செல்லல், முகநூலைப் பயன்படுத்தி பணம் மோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களின் அடிப்படையில் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

முகநூல் தொடர்பில் இந்த ஆண்டில் சுமார் 3400 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் இலங்கையின் கணனி அவசர பதிலளிக்கும் பிரிவினருக்கு அறிவுறுத்தியதனைத் தொடர்ந்து, முகநூல் நிறுவனம் கணக்குகளை முடக்கியுள்ளதாக இந்தப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாவலர் பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.