கொழும்பு விரைவில் புதுடெல்லியை போன்று வளி மாசடைதல் நிலைமையை எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல்துறை நிதியப் பணிப்பாளர் சஞ்சீவ சாமிக்கர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பில் நாள்தோறும் பாரியளவில் வளி மாசடைதல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாரிய நிர்மாணப் பணிகளின் மற்றும் வாகனங்களின் அதிகரிப்பு காரணமாகவே இந்த நிலைமைஏற்பட்டுள்ளது.
கொழும்பு சிட்டி திட்டமும் வளி மாசடைதலுக்கு காரணமாக உள்ளது என்று சாமிக்கர சுட்டிக்காட்டியுள்ளார்.






