தெற்காசியாவில் முதலிடம் பிடித்த இலங்கை!!

690

உலக உணவு பாதுகாப்பு சுட்டெண்ணில் தெற்காசியாவில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

பிரித்தானியாவில் இயங்கும் பொருளாதார புலனாய்வு பிரிவு டுபொன்ட் நிறுவனத்தின் உதவிக்கமைய வருடாந்தம் இந்த சுட்டெண் தயாரிக்கப்படுகின்றது.

உலகின் 113 நாடுகளில் இலங்கைக்கு 66வது இடம் பிடித்துள்ள நிலையில், தெற்காசியாவில் முதலிடம் பிடித்துள்ளது.

இலகுவாக பெற்றுக் கொள்ள கூடிய துல்லியம், தரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய பிரதான 3 விடயங்களின் கீழ் 28 துறைகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அடுத்து தெற்காசியாவில் அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்த சுட்டெண்ணில் அயர்லாந்து முதலாம் இடத்திலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன.