2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களின் பெறுபேறுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் பீ.சனத் புஜீத தெரிவித்துள்ளார். பல்வேறு முறைகேடுகள் காரணமாக பெறுபேறுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெறுபேறுகள் தொடர்பில் விசாரிக்க சிறப்பு தொலைபேசி இலக்கங்கள் சில வழங்கப்பட்டுள்ளன.
0112784201
0112784537
0113188350
0113140314
1911
குறித்த இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு பெறுபேறுகள் தொடர்பில் விளக்கங்களை பெற்று கொள்ள முடியும் என்றும் பரீட்சை ஆணையாளர் அறிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் இரவு வெளியாகியது. இந்நிலையில் இவர்களில் ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர்.
மேலும் 2017ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் தோற்றியிருந்த நிலையில், தனியார் பரீட்சார்த்திகள் 77 ஆயிரத்து 284 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






