தமிழ் அகதி ஒருவரை கைதுசெய்ய Interpol உதவியை நாடியுள்ள இலங்கை அரசு!!

483

 
தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்ற தமிழர்களை கைது செய்வதற்கு Interpol இன் உதவியை இலங்கை அரசாங்கம் நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகம் – மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கை தமிழர்களை கைது செய்வதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2014ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில், இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு தயாபர ராஜா அவரது மனைவி உதயகலா மற்றும் அவர்களது 3 குழந்தைகள் அகதிகளாகச் சென்றுள்ளனர்.

குறித்த அனைவரும் கடவுச்சீட்டு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றர்.

அகதிகளாக வந்த கதிர்வேல் தயாபர ராஜாவிற்கு எதிராக பல்வேறு பண மோசடிகள் குறித்த வழக்கில் இலங்கை நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், Interpol இன் உதவியுடன் குறித்த நபரை கைது செய்து நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, யாழ். சாவகச்சேரி நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவு ஒன்று இந்திய தூதுரகத்தின் ஊடாக மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[news_list title=”இவற்றையும் படியுங்கள்” count=”10″ show_more=”on” show_more_type=”link” header_background=”#5681a0″ header_text_color=”#ffffff” hide_dots=”yes”]