2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ்.மாணவனை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே சந்தித்துள்ளார்.
யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் குறித்த மாணவனின் வீட்டிற்கு இன்று காலை சென்ற வடக்கு மாகாண ஆளுநர் தனது வாழ்த்துக்கைளை தெரிவித்தார். அத்துடன் மாணவனின் பெற்றோரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையையும் மாணவனுக்கு அன்பளிப்புச் செய்தார்.
புலோலி புற்றளை, உபயகதிர்காமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் 3A பெறுபேற்றை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[news_list title=”இவற்றையும் படியுங்கள்” count=”10″ show_more=”on” show_more_type=”link” header_background=”#5681a0″ header_text_color=”#ffffff” hide_dots=”yes”]








