வவுனியா பழைய பேருந்து நிலையம் இன்று நள்ளிரவு முதல் மூடப்படுகின்றது என்று அறிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
வவுனியாவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுத் திறக்கப்பட்ட பின்னர் பேருந்து நிலையம் தொடர்பான பிரச்சினை பூதாகரமானது. தனியார் பேருந்து போக்குவரத்துத் தரப்பினருக்கும், இ.போ.ச. பேருந்துத் தரப்பினருக்கும் இடையில் இந்த விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துச் சேவைகளை நடத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனிக்கவில்லை.
இந்த விடயம் தொடர்பாக நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
வவுனியா நகர சபைச் செயலர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர், செயலாளர், இ.போ.சபையின் வடக்கு மாகாண ஆணையாளர், வவுனியா சாலையின் முகாமையாளர் எனப் பல தரப்புக்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்குகொண்டன.
கலந்துரையாடலின் முடிவில் வவுனியா நகர சபைச் செயலாளருக்கு இந்த உத்தரவை வடக்கு மாகாண முதலமைச்சர் பிறப்பித்தார். நகர சபைச் செயலாளரின் நடவடிக்கைகளுக்குப் பொலிஸார் துணை நிற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பணித்தார்.
“வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தரவுப்படி இன்று இரவு 12 மணி முதல் இ.போ.ச. பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம் என்று வவுனியா நகர சபைச் செயலாளர் தெரிவித்தார்.
வவுனியாவில் வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகளுடன் கிரிக்கெட் போட்டி..