இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மும்பையில் உள்ள லோகந்த்வாலா வணிக வளாகத்திற்கு இங்கிலாந்தை சேர்ந்த 27 வயது இளம் பெண் வந்தார். இவரிடம் மூன்று பேர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது.
இதனையடுத்து குறித்து பெண் ஒஸிவாரா பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் கவுரவ்குப்தா(36) என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.





