குமார் சங்ககாரவுக்கு சிறப்பு விருந்து : உணவின் பெறுமதி 38 இலட்சம்!!

641
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவுக்கு வழங்கப்பட்ட விருந்துபசாரம் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.
இதில் குமார் சங்ககாரவுக்கு வழங்கப்பட்ட உணவின் விலை 38 இலட்சம் ரூபாய் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
நுவரெலியாவில் உள்ள நட்சத்திர உணவகம் ஒன்றிலேயே குமார் சங்ககாரவுக்கு அண்மையில் சிறப்பு விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் குமார் சங்ககாரவின் மனைவியும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது அந்த நட்சத்திர உணவகத்தில் மாஸ்டர் ஷெஃப் விராஜ் ஜயரட்னவினால் தயாரிக்கப்பட்ட 38 இலட்சம் ரூபாய் பெறுமதியான இனிப்பு உணவு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தாமரைக் கோபுரம் ஒன்றுடன் அமைக்கப்பட்ட குறித்த இனிப்பு வகையை, நால்வர் பல்லக்கில் வைத்து சுமந்து வந்துள்ளனர்.
உணவகத்தின் வளாகத்தில் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் குமார் சங்ககாரவுக்கும், அவரது மனைவிக்கும் 38 இலட்சம் ரூபாய் பெறுமதியான உணவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.