பாடசாலையில் பரீட்சை எழுதும் போது குழந்தை பெற்றெடுத்த சவுதி மாணவி!!

298

சவுதியில் பாடசாலையில் பரீட்சை எழுதி கொண்டிருந்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அங்கேயே பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மேற்கு சவுதி அரேபியாவில் வசிக்கும் மாணவி பகுதி நேர படிப்பு படித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான அவர் தனது ஆங்கிலப் பரீட்சையை எழுத அங்குள்ள உயர் நிலை பள்ளிக்கூடத்துக்கு சென்றுள்ளார்.

பரீட்சை எழுத தொடங்கிய நிலையில் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் துடித்த நிலையில் அது குறித்து பள்ளி நிர்வாகிகள் அம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் மாணவிக்கு பாடசாலையில் இருந்த இரண்டு பெண் ஊழியர்கள் பிரசவம் பார்த்துள்ளார்.

பிரவத்தில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது, பின்னர் தாயும், சேயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாடசாலை தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

குழந்தைக்கு ஜைனாப் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பாராத நிலையில் தனக்கு ஏற்பட்ட பிரசவத்துக்கு உதவிய பள்ளி ஊழியர்களுக்கு மாணவி நன்றி தெரிவித்துள்ளார்.