ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் கரையோரப் பிரதேச காட்டுப்பகுதி நீரோடையொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிிவித்துள்ளனர்.
தமக்கு கிடைத்த தகவலை அடுத்தே அந்த சடலத்தை நேற்று மாலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள்.
இதேவேளை, மீட்கப்பட்ட சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. எனினும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மனித சஞ்சாரமற்ற பகுதியிலுள்ள புதர்கள் அடர்ந்த நீரோடையொன்றில் இச்சடலம் துர்வாடை வீசிய நிலையில் சிதைவடைந்து காணப்பட்டுள்ளது.
இது கொலையா அல்லது நீரோடையில் தவறிவிழுந்ததனால் ஏற்பட்ட உயிரிழப்பா? என்பதை ஊகிக்க முடியாதுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








