வவுனியாவில் 10 கிலோ பண்டி இறைச்சியுடன் ஒருவர் கைது!!

261

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நேற்று (04.01) மாலை 10 கிலோ பண்டி இறைச்சியுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை நெளுக்குளம் பகுதியில் பண்டி இறைச்சி 10 கிலோவுடன் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.