நுவரெலியாவில் பூப்பனிப் பொழிவு!!

1004

நுவரெலியாவில் தற்போது நிலவும் கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் பூப்பனி பொழிவு நிலவி வருகின்றது.

அதிகாலை முதல் முற்பகல் 11 மணி வரை கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாநகர எல்லைக்குள் சில இடங்களில் இன்று பூப்பனி பொழிந்துள்ளதை காணமுடிந்துள்ளதாக பிரதே மக்கள் தெரிவித்துள்ளனர்.

பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால், நுவரெலியாவில் காய்கறி செய்கை மாத்திரமல்லாது தேயிலை பயிருக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நுவரெலியாவில் பனிப்பொழியும் காலத்தில் வருடந்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.