வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று (05.01.2017) மதியம் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்க்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்ணாட்டி கணேசபுரத்தில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடத்தொகுதியில் இப்பெண் தூக்கில் தொங்கியதை அவதானித்த பொதுமகனொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் வழங்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.