வவுனியாவில் 27 இந்தியர்கள் அதிரடியாக கைது!!

325
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 இந்திய பிரஜைகள் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் கடவுச்சீட்டுக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-தமிழ்வின்-