மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் உள்ள வீடு ஒன்றில் 35 பவுண் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த திருட்டுச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலை வீட்டில் உள்ள இரு பெண்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளேச் சென்ற திருடன் குறித்த நகைகளை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






