இன்று (09.01.2018) வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை குகன் நகரைச்சேர்ந்த திருமதி மேரி மெற்றில்டா சந்திரசேகரனின் கணவன் மூளையில் நடைபெற்ற சிகிச்சை காரணமாக கைகால் இயங்காத நிலையில் நாளாந்த கருமங்களை மேற்கொள்ள சக்கர நாற்காலி மற்றும் Walker கேட்டு வந்த நிலையில் வவுனியா மக்கள் வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர் திரு நந்தகுமார் உதவியுடன் மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் வைத்து சக்கரநாற்காலி வழங்கப்பட்டது.





