வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பாத­சா­ரிக் கடவை அமைக்கக் கோரிக்கை!!

577

 
வவு­னியா புதிய பேருந்து நிலை­யத்­துக்கு முன்­பாக சாலை­யில் பாத­சா­ரி­கள் கடவை இல்­லா­த­தால் பயணி­கள் சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர்.

கடந்த முத­லாம் திக­தி­யி­லி­ருந்து வவு­னியா புதிய பேருந்து நிலை­யத்­தில் தனி­யார் மற்­றும் இ.போ.ச. சேவை­கள் நடைபெற்று வரு­கின்­றன. எனி­னும் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்­பாக பாதசாரிக்கடவை­கள் அமைக்கப்படவில்லை.

சுமார் 195 மில்­லி­யன் ரூபா செல­வில் அமைக்­கப்­பட்ட இந்­தப் பேருந்து நிலை­யத்­துக்கு முன்­பாக பாதசாரிக் கடவை இல்லை. இதன் கார­ண­மாக பேருந்து நிலை­யத்துக்கு சாலையைக் கடந்து செல்­லும் பய­ணி­கள் சிரமக்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

விபத்து இடம்­பெ­ற­லாம் என்ற பயத்­து­டன் சாலையைக் கிடைக்கவேண்டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. வடக்குப் பகுதிக்கான முதன்­மை­யான கண்டி சாலை­யில் இரவு – பகலாக கன­ரக வாக­னங்­கள் பயணிக்­கின்­றன. இதனால் விபத்­து­கள் இடம்­பெ­றும் அபா­யம் அதி­கம் காணப்­ப­டு­கின்­றது.