வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை : கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

852

வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகளின் தாயான கார்த்திகா தினேஸ்குமார் என்பவரை கடந்த இரண்டு தினங்களாக காணவில்லை என குறித்த பெண்ணின் கணவர் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தாயை காணாமல் அவரின் இரண்டு குழந்தைகளும் ஏக்கத்தில் காய்ச்சலால் சிரமப்படுவதாக குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

எனது மனைவினை கண்டவர்கள் அருகேயுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் அல்லது 0770745487 என்ற தனது தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாரும் கணவன் மேலும் தெரிவித்துள்ளார்.