தந்தை மீது பொலிசில் புகார் அளித்த சிறுவன் : காரணம் என்ன தெரியுமா?

759

உத்தரபிரதேச மாநிலத்தில் தன் மீது தனது தந்தைக்கு அக்கறை இல்லை என்று கூறி 12 வயது சிறுவன் பொலிசில் புகார் அளித்துள்ளது பரபரப்பாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் இட்டாவா நகரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஓம் நாராயண் குப்தா, தன்னுடைய தந்தை மீது பொலிசில் புகார் அளித்துள்ளான்.

அதில் ’தந்தைக்கு குடும்பத்தின் மீது அக்கறை இல்லை, குடும்பத்தினருடன் அவர் நேரம் செலவிடுவதே இல்லை, அவர் நடத்தி வரும் கடையிலினால் மிகவும் ஓய்வில்லாமல் இருக்கிறார்.

மேலும், என்னுடைய நண்பர்கள் கண்காட்சி ஒன்றிற்கு செல்ல இருக்கின்றனர். நானும் அவர்களுடன் செல்ல அவரிடம் அனுமதி கேட்டபோது, தனக்கு வேலை இருப்பதால் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

எனவே, அவரை அழைத்து திட்டி அனுப்புங்கள்’ என தெரிவித்துள்ளான். சிறுவனின் புகாரை ஏற்ற பொலிசார், சுமார் 40 முதல் 50 பிள்ளைகளை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நாராயண் குப்தாவையும் அவர்களுடன் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் இது குறித்து பொலிசார் கூறுகையில், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள், வேலை காரணமாக தங்களது பிள்ளைகளை கவனித்துக் கொள்ள தவறுகின்றனர். சமூகத்தில் இது மிகவும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.