வவுனியாவில் களைகட்டிய தைப்பொங்கல்!!

1708

 
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட உலக வாழ் அனைத்து தமிழர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் பண்டிகையை முன்னிட்டு மட்பாண்டங்கள் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

வவுனியா மக்களும் தைத்திருநாளுக்காக சிறப்பாக ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் வவுனியாவில் பானை, கரும்பு, அகப்பை, பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் வியாபாரம் உச்சம் கண்டுள்ளது.

அத்துடன் தைப்பொங்கள் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் வவுனியா களைகட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.