வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் மாபெரும் பொங்கல் விழா!!

1062

வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகமும் எல்லப்பர்மருதங்குளம் சிவன் முதியோர் இல்லமும் அல்லையூர் இணையத்துடன் இணைந்து பரீஸ் லாசப்பல் தமிழ் வர்த்தகர்கள் அனுசரணையில் நடாத்தும் மாபெரும் பொங்கல் விழா 14.01.2018 ஞாயிறு மாலை 2 மணிக்கு சிவன் முதியோர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

சிவன் முதியோர் இல்லம் மற்றும் கோவில் குளம் சிவன் ஆலய செயலாளர் ஆ.நவரட்ணராஜா தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், கௌரவ விருந்தினர்களாக பிரதேச செயலாளர் க.உதயராசா, வவுனியா கல்வியல் கல்லூரி பீடாதிபதி க.சுவர்ணராஜா, சட்டத்தரணி க.தயாபரன், நகரசபை செயலாளர் இ.தயாபரன் ஆகியோரும்,

சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் மாவட்ட முதியோர் சங்கத்தலைவர் வைத்தியர் க.இராமச்சந்திரன், ஓய்வுபெற்ற அதிபர் சி.வையாபுரிநாதன், வவுனியா இந்துக்கல்லூரி அதிபர் த.பூலோகசிங்கம் முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர் க.நடராஜா, தமிழ் விருட்சம் சந்திரகுமார் கண்ணன் ஆகி யோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வில் விசேட அம்சமாக தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இன்பமாக வாழ்வதற்கு பெரிதும் துணை நிற்பவர்கள் நட்புகளே …! உறவுகளே..! என்ற தலைப்பிலான பட்டிமண்டபமும் இடம்பெறவுள்ளது.

இதில் இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாஸன், ல.சதீஸ்குமார் , ஜெ.திருவரங்கன், ம.மதியழகன், திருமதி கி.கிசாலினி, திருமதி நந்தீஸ்வரி ஆகிய பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பி.ப 1 மணிக்கு வவனியா யங்ஸ்ரார் மைதானத்தில் இருந்து போக்குவரத்துக்கான பஸ் வண்டிகள் புறப்படுகின்றன.