வவுனியாவின் பல பகுதிகளில் இன்று (14.01.2018) உழவர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் பொது இடங்கள் மற்றும் சிறுவர், முதியோர் இல்லங்கள் எனப் பல்வேறு இடங்களிலும் பல்வேறு தரப்பினராலும் இன்று பொங்கல் பொங்கி தைத்திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குறிப்பாக வவுனியா நகரிலுள்ள குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம் , வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயம், அருள்மிகு மாடசாமி ஆலயம் உட்பட சகல இந்து ஆலயங்களிலும் பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு மக்கள் தமது வீடுகளிலும் பொங்கல் பொங்கி மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.
சூரிய பகவானை தைத் திருநாளிலே வழிபடும் முகமாக அதிகாலையிலே பொங்கலுக்குரிய வேலைகளை முடித்து சூரிய பகவான் காலையில் எழுந்துவரும் வேளையில் பொங்கல் படைத்து விசேட வழிபாடுகள் செய்வது தமிழர் பண்பாடாகும்.
இன்று நடைபெற்ற தைத் திருநாள் நிகழ்வுகளில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு சூரிய பகவானுக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.





















