வவுனியாவில் பொங்கல் தினத்தில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு!!

700

 
பொங்கல் தினத்தினை முன்னிட்டு வவுனியா தரணிக்குளம், கல்மடு 2ம் யுனிட் பகுதியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட முன்னாள் போராளிகள் இருவருக்கு கனடா கியுபைக் மொன்றியல் நகரைச் சேர்ந்த பாராவூர்தி சாரதிகள் நற்பணி மன்றத்தினால் இன்று (14.01.2018) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

முன்னாள் போராளிகள் ஆகிய நாங்கள் வறுமைக்கோட்டிற்குட்பட்டு கடும் வறுமைக்கு மத்தியில் வாழ்வதாக கனடா கியுபைக் மொன்றியல் நகரைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகள் நற்பணி மன்றத்தினருக்கு விடுத்த வேண்டுகோளிக்கிணங்க ஒருவருக்கு சுமார் ரூபா 5000 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று வீதம் இருவருக்கு இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவித்திட்டத்தினை நற்பணி மன்றத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகளான பா.கதீஷன், பா.லம்போதரன் , வ.பிரதீபன் ஆகியோர் வழங்கினர்.