வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையினால் 180 குடும்பத்தினருக்கு பொங்கல் பொருட்கள்!!

831

 
வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையினரால் 180 பேருக்கான பொங்கலுக்கு தேவையான அனைத்து பொதிகளுடனும் அவரவர் ஊர்தேடிச் சென்று வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் காலை கோவில்குளம் மஹாவிஷ்ணு தேவஸ்தானத்தில் ஆச்சிபுரம், சிதம்பரபுரம், இறம்பைக்குளம், மகா இறம்பைக்குளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற 47 குடும்பங்களுக்கும் பேரவையின் தலைவர் சிவ.கஜேந்திரகுமார், நிர்வாக உறுப்பினர் வை.மயூரகுருக்கள், வைத்தியர் ராமச்சந்திரன் பேரவையின் மூத்த உறுப்பினர் பாலா ஆகியோர் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து கல்மடு, பூம்புகார், ஈஸ்வரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு கல்மடுவில் வைத்தும், கந்தசாமி நகர், சாம்பல் தோட்டம், சமயபுரம், சுந்தரபுரம் சாஸ்த்திரி கூழாங்குளம் கிராமத்தை சேர்ந்த 53 குடும்பத்தினருக்கு சாம்பல் தோட்டம் விநாயகர் ஆலயத்தின் அருகே அமைந்துள்ள மண்டபத்திலும் கன்னாட்டி ஓமந்தை பனிக்க நீராவியை சேர்ந்த 20 குடும்பத்தினருக்கு பனிக்க நீராவியில் அமைந்துள்ள திருமண மண்டபத்திலும் தம்பனைச்சோலை கிராமத்தை சேர்ந்த 10 குடும்பத்தினருக்கு அக்கிராமத்திலும் வைத்து வழங்கப்பட்டது.