வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா!!

1107

 
2018ம் கல்வியாண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று (15.01.2018) சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலை பிரதி அதிபர் மதிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை முன் வாயிலில் தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவர்கள் தரம் 1 இல் கற்பதற்காக பாடசாலைக்கு வருகை தந்த புதிய மாணவர்களை மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றதுடன், பான்ட் வாத்தியத்துடன் அவர்களை அரவணைத்து பாடசாலைக்கு அழைத்துச் சென்றனர். இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.