வவுனியாவில் காசநோய் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு போசாக்குணவு!!

259

 
வவுனியா பொதுவைத்தியசாலையில் உள்ள மார்பகசிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற்று வருகின்ற நோயாளிகளுக்கான போசாக்கினை மேம்படுத்தும் நோக்கில் வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் V3 அமைப்பின் ஊடாக மாதாந்தம் போசாக்கு உணவினை வழங்கும் திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் இன்று (16.01.2018) செவ்வாய்க்கிழமை வவுனியா பொதுவைத்தியசாலை காசநோய்ப்பிரிவில் வைத்து வைத்தியர்கள் எஸ்.ஹரிஹரன், ம.கலைச்செல்வன் ஆகியோரிடம் மேற்படி போசாக்கு உணவுப்பொருட்களை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் கையளித்தார்.