ஒருபோதும் ரஜனிகாந்த் ஆட்சியமைக்க முடியாது : வெளியான கருத்துக் கணிப்பு!!

570

 

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் 33 இடங்களில்தான் வெற்றி பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஊடகம் ஒன்று தமிழக அரசியல் நிலவரம் குறித்து நடத்திய கருத்து கணிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பு முடிவுகளுக்கு அமைய, “ தேர்தல் நடைபெற்றால் தி.மு.க 130 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும். 2016ஆம் ஆண்டு தேர்தலை விட தி.மு.கவுக்கு 32 இடங்கள் அதிகமாக கிடைக்கும்.
அ.தி.மு.க படுதோல்வியைச் சந்திக்கும். அக்கட்சிக்கு 68 இடங்கள்தான் கிடைக்கும். 2016ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற 68 தொகுதிகளை அ.தி.மு.க இழக்கும். ரஜினிகாந்த் கட்சி 33 தொகுதிகளில் வெல்லும்.
இதர கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றும்” என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் ரஜினி வெல்ல முடியும் என 53 வீதமானவர்களும், ரஜினியால் வெற்றிபெற முடியாது என 34 வீதமானவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என 13 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.